சனி, 5 ஜனவரி, 2019


கதை மந்திரம் கற்றுத்தரும் கதாசிரியர் கொ.மா.கோ.இளங்கோ



சமகால குழந்தை இலக்கியத்தில் புதிய தடங்களைத் தன்னுடைய படைப்புகளில் படைத்து வருபவர் கொ.மா.கோ.இளங்கோ. யதார்த்தத்தில் அதிபுனைவை மிகக்கச்சிதமாக கலந்து, அவர் எழுதிய மந்திரக் கைக்குட்டை’, அறிவியல் புனைவு சிறார் நாவல்ஜிமாவின் கைபேசி’, சொந்த வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு எழுதிய வாழ்வியல் சித்திரமான சஞ்சீவி மாமாஎன எல்லாவற்றிலும் புதிய பாதைகளைப் போடுகிறவர் கொ.மா.கோ.இளங்கோ.

குழந்தை இலக்கிய மொழிபெயர்ப்புப் படைப்புகளிலும் அவருடைய தேர்வு குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற மொழிநடையும், கதை சொல்லும் பாணியும், அவரை குழந்தை இலக்கிய எழுத்தாளர்களில் முக்கியமானவராக மிளிரச்செய்கிறது. குழந்தை இலக்கியத்தில் எல்லாவிதமான சோதனை முயற்சிகளையும் செய்து புதிய, புதிய படைப்புகளை உருவாக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். சமகால குழந்தைகளின் மனநிலையையும் கணக்கில் எடுத்துக் கொண்டு எழுத வேண்டிய கட்டாயம். இன்னமும் காலத்துக்கு பொருந்தாத முனிவர், சாபம், வரம், என்று பொருட்களை வைத்து எழுதத் தேவையில்லாத காலம்.

குழந்தைகளிடம், அறிவியல் பார்வையையும் கற்பனை வளத்தையும் மானுட அறத்தையும் வளர்க்கிற படைப்புகளை உருவாக்க வேண்டிய காலம். அப்படியான பல குறிப்பிடத்தக்க படைப்புகளை உருவாக்கியிருக்கிறார் கொ.மா.கோ.இளங்கோ. அதனாலேயே கொ.மா.கோ.இளங்கோ, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகளின் முன்வரிசையில் இருக்கிறார்.

-      உதயசங்கர்

கருத்துகள் இல்லை: