புதன், 23 பிப்ரவரி, 2011

படங்களும் கவிதை வரிகளும் -- வார்ப்பு இணைய இதழில் வெளிவந்தவை.

படங்களும் கவிதை வரிகளும் -- வார்ப்பு இணைய இதழில் வெளிவந்தவை.



தொலைந்தது மீண்டும் வந்தது

மனதின் அடிநாளங்களில்
மையம் கண்டு
நரம்பு கற்றையுள்
பிளம்பென புகுந்து
மௌனம் பறித்து
ஞானம் வருடி
மூளை செதில்களை முத்தமிட்டு
உள்ளங்கை தாவியோடிய
நினைவுகள்
ஒரு பொழுது
உயிர் கூரையில்
உலர்ந்து தொலைந்தன

நேற்றைய பகலில்
நெருப்புதிர்த்த காற்றில்
பரவிய நினைவுகள்
நெஞ்சில் சுழன்று
தாக்கம் தனிந்த நொடியில்
தொகுத்திருப்பேன்
புதுக்கவிதை வரிகளாய்…



2011 - நாள் நலமோடு தளிரும்




நாள் நலமோடு தளிர
தியாகம் தொடக்கம்

ஹைட்ரஜன் வாயுவின் தியாகம்
ஆக்சிஜன் அணுக்களின் அர்ப்பணம்
உள்ளங்கை தேங்கிய தண்ணீர்

வழிந்து போன சொட்டொன்று
சூத்திரம் சொல்லும்

கருத்தரித்த மேகம்
கனமழை பெற்றெடுக்க
மலைகள் மோதி
மரங்கள் சரிந்து
முள்முனை கிழிபட்டு
ஐந்தறிவு சாதி மூத்திரம் சுமந்து
இடம் மரித்த பாறைகள் இடர்ப்பட்டு
கூழாங்கற்களை குருமணலாக்கி
வெள்ளமென ஓடிவரும் நீர்

கற்றுக் கொள்கிறோம்
தடைகள் தாண்டியே வாழ்வு

2011 - ல்
தமிழ் சனமே !
கால்களுக்கு நீருற்றி
கடந்தன கழித்து
நிலைவாசல் தாண்டலாம்

நாள் நலமோடு தளிர
தியாகம் தொடக்கம்


காதல் போயின் ...





பாவையவள் கன்னம்
பதியமிட்ட புன்னகை
பொன்கோர்த்த மனதின்
ஈசான மூலையில்
உணர்ச்சியுள் பரவி
கிளர்ச்சியின் மெய் கூட்டி
பூப்பெய்திருக்கும்

உதடு நழுவிய மொழி
உயிர் பற்றி ஏறி
இதய களஞ்சியத்துள்
இடம் பெயர்ந்து
காப்புரிமை பெரும்
சரீர வேதத்து
தூண்டு பொருள் அவள்
அகம் பூத்த மென்மையுள்
மகரந்தசேர்க்கை

ஒற்றை நேர் கோடு
புழுவின் பகுதி
காதல் தூரிகை
வளைகோடு வரைதலில்
வண்ணத்துப்பூச்சியின் முழுமை

அவளேழுதிய வரிகள்
இவனரிவின் பலம்
பத்திரண்டு காலம்
பதம் பட்ட கள்
குறிபேட்டில் முதல் அத்தியாயம்
குற்ற உணர்ச்சியின் குளுமை
இரண்டாம் பகுதி
இதயம் எழுதிய மௌனம்
பின் வரும் மூன்றில்
ரசிப்பின் முத்த ருசி
நான்காம் பாடம்
நழுவிய வெட்கம் நனையும்
அத்தியாயம் ஐந்தில்
இதழ்களின் ஆதிக்க ஈரம்
காதல் நன்னூல்
கருப்பு மை காவியம்

உறைந்து போன எழுத்துகள்
படிக்கிற ஆவல்
புரட்டிய நாட்கள்
புதிதாய் பல முறை
உயிர் சலவை பெரும்
மூச்சு வாங்கும் உணர்ச்சிகள்
ஆயிரம் அர்த்தங்கள்
அடுத்தடுத்து அவதரிக்கும்

புவியியல் கற்கும்
பூமத்திய ரேகை காதல்
வரலாற்று கோளத்து
விட்டம் காதல்
கணிதத்தின் கோணம்
இயற்பியலில் விசை
வேதியலில் கலவை
கணினியின் செயலி
எல்லாம்
அன்பின் அடக்கம்
காதலின் கசிவு
காப்பியங்கள்
அன்பின் வழியது
உயர் நிலை
காதல் வண்மை
மெய்த்துணை திண்மை

காதல் போயின் ...
போகும் காதல்
சாகும் காதல்
கடல் வழிந்த நாட்கள்
நிலம் கரைந்த மணித்துளி
உயிரற்ற புவியுள்
உடலில்லா உலகில்
இறுபட்ட மனங்களுள்
ஈருயிர் நெருப்பில்

தடை கண்டு
வலவை போதல்
அன்பிற்கில்லை
வீழ்ந்து மடிதல்
காதலின் பண்பு!

நன்றி : வார்ப்பு இணைய இதழ்



திங்கள், 21 பிப்ரவரி, 2011




Monday January 17, 2011

கருவெட்டா தமிழ் அணுக்கள்!

கொ.மா.கோ.இளங்கோ




தலையணை
நிரம்பிய உறக்கம்
நித்திரையின் உள்ளீட்டில்
உற்புகுந்து
வேரற்று விருட்சமென
கற்பனை பரப்பி
நிமிடங்களின் நீளம் வளர்த்து
கருகி மடியும்
கனவுகள்

இதயம் எத்தனித்த அம்புகள்
அங்கிங்கெலாம் அலைந்து
ஆரண்யம் அடங்கும்
அரக்கன் அலங்கரிப்பான்
மகிழம்பூ மார்சேரும்
கோலமிடுபவள்
கைக்குட்டை காதல் வரைவாள்
விமான பணிப்பெண்
விகடம் கேட்ப்பாள்
மான்கள் பசுவாகும்
மாவடு சுவையில்
பலாச்சுளை வாசனை யனைத்தும்
கனவு கொண்ட காண்டங்கள்
என்னுள் ... இல்லை இவைகள்
இதய சாகுபடி
தமிழ் கனவு!
கவிதை பித்தம்!

ஆறாம் வகுப்பு...
புத்தகப்பையில் தமிழ் பாட நூல்
தலைகீழாய் தூங்கும்
வெள்ளை காகிதத்தில்
வினாக்கள் மட்டுமே எழுதிய நாட்கள்
சோனையாண்டி வாத்தி கைகளில்
காயமானது கன்னம்
தத்தளித்திருந்த தமிழ்
தடுமாறி கரை சேரும்
எழுபதுகளின் பிள்ளைத்தமிழ்
அசை கற்று மரபின் பல்லக்கேறும்

இந்நாள்...
கவிதை எழுதாது
கனவில்லை
தலையணை நிரம்பி தமிழ்
ஈரடி சீரில் மூச்சு
இதய அசைவு எதுகை
மூளை தூண்டும் மோனை
விரல் சுண்டிய விருத்தம்
இருளுக்கு பயந்து
என் படுக்கையறை பதுங்கும்
எழுத்துக்கள்
இவை யாதும் இன்றி
எமக்கில்லை கனவு

கனவுகளின் பங்களிப்பில்
கவிதை முளைவிடின்
இன்னும் எழா .. எழுதா ...
கவிதைகள்
காற்று வெளி
திரை சீலை
புங்கை மரம்
பால் வீதி
பேனா முனை யெங்கும்
வியாபித்திருக்கும்
கருவெட்டா
அணுக்களாய்...



Kelango_rahul@yahoo.com


நன்றி :   திண்ணை இணைய இதழ்
பதிவேற்றிய நாள் : 17 .01 .2011


Sunday January 30, 2011

ஹைக்கூ கொத்து

கொ.மா.கோ.இளங்கோ





தாத்தா கட்டிய வீடு
குடியேறியிருக்கும்
சிலந்தியின் வாரிசு




இரும்பு சத்து குறைவு
சிவப்பு மாத்திரை விழுங்கும்
அந்தி





உடலுறுப்பு தான பதிவேடு
கையெழுத்திட்டாள்
ஐந்தாம் நிலை சிறுமி




மழை பெய்த நாள்
திருடு போகும்
மண் வாசம்




குளம் நிறைய நீர்
குளிக்க பயந்து
தாமரை பூக்கள்




மின்னல் மின்னும்
இடி தொடரும்
குடிசையில் வானொலி


நன்றி :   திண்ணை இணைய இதழ்
பதிவேற்றிய நாள் : 30 .01 .2011
 



Sunday February 6, 2011

வாண்டு பருவமும் வயதான கிழவியும்

கொ.மா.கோ.இளங்கோ





'சொர்க்கு
தவளை நீச்சல்
பேக் சார்ட்
பூசணிக்காய்
பல்டி
சப்பை கட்டு
முங்குளி பாம்பு '
கண்மாய் மூழ்கி குளித்ததில்
பொடுசுகள் கண்டெடுத்த பெயர்கள்
மூன்று மணி நேர குளியல்
உள்ளம் உலகம் உலவி வரும்
உற்சாகம் குளத்தின் தரை தொடும்
என்னோடு சேர்த்து
நான்கு வாண்டுகள்

'ஊளை' சந்திரன்
'சீழ்' முருகேசன்
'இங்கு மண்டை'
'சுண்டெலி' பாபு
வகுப்பறை அணிவித்த
தேன் தமிழ் பட்டங்கள்

வாரமிருமுறை
பாடசாலைக்கு முழுக்கு
கண்மாய்க்கரை 'மஞ்சனத்தி மரம்'
'பைகட்டுகளின்' சேமிப்பு கிடங்கு
புத்தகமும் பரீட்சையும் புளிக்கும்
மதிப்பெண் அட்டை கிடைக்கப்பெறும்
முந்தைய நாட்களில்
'ஊமத்தம் பூ' பலன் சொல்லும்
சத்தம் எழுப்பி பூ உடையின்
தமிழ் தேர்வில் பாஸ்

ஊர் மேய்ந்த பொழுதுகள்
வீண் வம்பிழுத்த வாதங்கள்
கணக்கிலில்லை
குண்டு சோடா கோலியாட்டம்
குதூகல கொண்டாட்டம்
'ஏத்தி பித்தி '
'வை ராஜா வை '
' தட்டு தாம்பூலம் '
'கள்ளம் போலீஸ்'
' பிலிம் கட்டு சேர்க்கை'
வீரமேரிய விளையாட்டுகள்
தினந்தோறும்
தோற்ற நினைவு தான்

காது இழுத்து பிடுங்கும்
பிச்சையம்மாள் டீச்சர்
மேசைமேல் முட்டியிட வைக்கும்
மார்த்தாண்டம் வாத்தியார்

சின்ன வயசு கூத்து
செயல் பிழைகள்
சிங்காரப்பருவம்
மீண்டு வருவதற்கில்லை
முண்டியடித்து புகுந்து
முரண்டு செய்து
தட்டில் நிரப்பிக்கொள்ளும்
மதிய சத்துணவு
'கம்மங்கதிரு மிட்டாய்' விற்கும்
கிழவியுடன் பகிர்ந்துன்பேன்
அவள் பிசையும் உருளைகள்
மிட்டாயை மிஞ்சி இனிக்கும்

அதன் பின்
கிழவியை யாரும்
பள்ளிக்கூடம் பக்கம்
பார்த்ததே இல்லையாம் ...





நன்றி :   திண்ணை இணைய இதழ்
பதிவேற்றிய நாள் :06 .02 .2011







Sunday February 13, 2011

ஹைக்கூ கொத்து – 2

கொ .மா.கோ.இளங்கோ




உழுத நிலம்
உரமாகி போகும்
மண் புழுக்கள்

பேருந்து நிறுத்தம்
முந்தினர் பலர்
வழியின்றி திணறும் காற்று

சேவல் கூவும் அதிகாலை
விழித்து கொள்கிறான்
ஆதவன்

உடல் கெடுத்த பாவம்
உயிர் வளர்த்து பார்க்கும்
மது குப்பியுள் பூங்கொடி

வாசல் கதவு தாண்டும்
முயற்சியில் குழந்தை
முந்திக்கொண்டது மூத்திரம்

சாலையோர விபத்து
சிறுமி பிழைத்தாள்
எறியப்பட்ட பூக்கள்


நன்றி :   திண்ணை இணைய இதழ்
பதிவேற்றிய நாள் :13 .02 .2011

கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்--

கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்

கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்

1. வளியின் உள்ளீடற்ற ஓசை...
வளியின் ஊடுருவல்
இசைக்கான தபால் தலை
நடை, தாளம், ஜதை
அசைவு, முத்திரை, பாவனைகள்
விலாசம் நிரப்பிய கடிதங்கள்
நடனம் பட்டுவாடா
ஒலியின் உந்து காற்று
தீண்டல், தழுவல், வருடல்
உயிர்ப்பித்தல், அரவணைப்பு
உணர்வூட்டல், படர்பித்தல்
சுவாசித்தல், உலர்வித்தல்
சுடர்வித்தல், நடைப்பித்தல்
அசைவித்தல், ஒளிர்வித்தல்
சலசலப்பு, அழுவித்தல்
நெகிழ் வூட்டல், விரித்தல்
பிரித்தல், குளிர்வித்தல்
வளர்த்தல், கேட்ப்பித்தல்
தொய்வித்தல், தாழ்வித்தல்
தளிர்த்தல், பறத்தல்
பூப்பித்தல், பகுத்தல்
அனைத்தும்
வளியின் பூரண முகவரிகள்!
அண்ட அசைவின்
மைய தந்தி காற்று

வளிபுகா வழித்தடத்தில்
ஓசை உணர்கிறேன்
நான்மட்டும் !
சலசலத்து பாயும் வெள்ளம்
ஆழம் மிகுந்த நீரடியுள்
தங்கி உருளும்
கூழாங்கற்களின்
உரசல் ஓசை
கேட்கிறது காதுகளுள்...
காற்றின் ஏமாற்றம் கலந்து!

2. அன்பிலார் எல்லாம் தூண்டில் !
சுரம் தப்பிய மனசு
அறிந்திராது வீழும்
வேண்டப்பட்ட பிசாசுகள்
வீசிய தூண்டிலில்

செலவாகி தவிக்கும்
வாழ்வின் எச்சம்
தக்கை உருளையேறி மிதக்க
தொடர் நெருங்கும் உறுத்தல்கள்
நட்புப் பேழையுள்
விஷம் துப்பி நிரப்பும்

அறியா காலம்
வஞ்சக சூழல்
பொன்னினிமை பொய்முகங்கள்
உயிர் மென்மை உறிந்து மகிழும்
அட்டை குழுக்கள்
அவசரமாய் இருள் புகுத்த
தன்னிலை உணரா சக்தி தோய்ந்து
வீழுகிற உள்ளம்
தண்டுவடம் கிழிபட்டு
தூண்டில் சிக்கும்

காயம் பதிந்த ஜீவன்
யாரும் இலா சூழலில்
தனிமை பருகி
குற்றம் பதியா கோப்பின்
நகல் துடைத்து
மீண்டும் மலர்ந்த நாட்களை
சுவாசிக்க தயாராகும்
உயிர் ஒட்டிக்கொள்ளும் ...
இனி
உதிர்ந்த செதில்கள்.

Kelango_rahul@yahoo.com



' பதிவுகள் ' இணைய இதழில் வெளியான கவிதைகள் .
மார்ச் ' 2011




சுதந்திரம் தாத்தாவுக்கு வாய்க்கரிசி !

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 


செங்கதிரோன்
சிறுவாணி
கொல்லையில்
துயில்
எழுந்த நண்பகல்
புறப்பட
தயாராகும்
'சுதந்திரம்' தாத்தாவின்
இறுதி
ஊர்வலம்
மாலை
, தப்பட்ட மரியாதை சகா
மனையுள் மார்தட்டி ஓலமிடும் 
மாதர் சங்கமத்தை விஞ்சி  
பெருமகன் பேணிய 
பண்ணை புறாக்களின்
'பொளக்''பொளக்''பொளக்' 

கண்ணீரை பீய்ச்சி வரவழைக்கும்
 

யதார்த்தம் சரிந்த சமுகப் பிணியுள்
'மனிதம்' சுரம் பிடித்த
ஆர்மோனியம்  

ஆசை நட்டு வளர்த்த அமைதியின்  
அச்சாணிப் பூக்கள் 
 அறுபத்து நான்கு புறாக்கள் 
எதிர் வரும் நாட்களில்  
யார் கூடும் சாவடியில்
மனு சேர்ப்பிக்கலாகும்
 

மீண்டுமொரு முகவரிக்காக...  
நெல் வீசி கொஞ்சிப் பழக  
நெஞ்சங்களின் பற்றாக்குறையல்லவே!
 

காடு சேர்ந்தார் தாத்தா
காரியங்கள் நடந்தேறின
படியேற்றிய பாதம்
பணிந்தனர் பலர்  

தகன வளர்ப்பு தயார்
வாக்கின் நம்பிக்கைக்கு  

வாய்க்கரிசி மணிகள்  
இதயம் பிரிந்த ஒரு துளி ரத்தம்  
எங்கோ கசிந்து மடியும் 
 இருள் கவ்விய வானம்  
எழத்துடித்த வேளள கண்ணில் பட்டது...  
சாம்பல் நிற புறாவொன்று
அலகு நிறைய
குருமணி குவியலோடு
!




நன்றி :  ' கீற்று ' இணைய இதழ்








துக்கமெனும் நாய்க்குட்டி

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 


மனதுக்கு பக்கம்
நிறைவாய்
மயங்கிய நிலையில்
வால் சுருட்டி கண் அயரும்
துக்கம்
நாய் குட்டியை நினைவுபடுத்தும்.
கூர் உச்சி மலையில்
ஈக்களை புறமகற்றி
தேன் துளி சுவைப்பதில்
சுகம் வகுப்படுமாயின்
பிரதி வேளை
பற்றுதலோடு வாழ்ந்து காட்டுவேன்
சின்ன சின்ன ஆறுதல்கள்
ரொட்டித் துண்டுகளாய்...
துக்க நாய் குட்டி
இன்னமும் முன்னேறி
மனதின் அருகாமையில்
எச்சில் வடித்தபடி!
- கொ.மா.கோ.இளங்கோ ( kmkelango@gmail.com)இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்






நன்றி :  ' கீற்று ' இணைய இதழ்





வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2011-01-01 


picture for poem
பதுக்கிய அதிர்வுகள்
கொ.மா.கோ.இளங்கோ


இவரின் பிற கவிதைகள்
 


பதுக்கிய அதிர்வுகள்
-----------------------------


யாரும் அறியாமல்
பதுக்கி வைத்திருக்கிறான்
அவனுக்கு மட்டுமே விளங்கும்
அன்பு அதிர்வுகளை


மிதிவண்டி காதைக்குள்
நளன் எனக்கொண்டன்
புறநகர் பள்ளியில்
பத்தை எட்டிய
தமயந்தி


கண்கள் பாய்ச்சி
கைகள் பறக்கவிட்டு
காதல் காற்றின் அகம் சுவாசித்து
இதழ்கள் எச்சில் விழுங்கிய நாட்கள்


பேருந்தை துரத்தி துரத்தி
இணைப்பு அறுந்துபோன மிதிவண்டி
கனவு கண்ட மறுநாள்
காத்திருக்கும் அவள்
'கிணிங் ''கிணிங் ' சவாரிக்காக


தொடர்ந்தனர்
தொடர்ந்தது
வசந்தத்திற்கு பின்பு துரத்திய காலம்
துருவேற்றியது அன்பில்


காற்றிலா சக்கரத்து நடுவில்
காய்ந்து கிடககிறானவன்


யாரும் அறியாமல்
பதுக்கி வைத்திருக்கிறான்
அவனுக்கு மட்டுமே விளங்கும்
அன்பு அதிர்வுகளை
வண்டி சக்கரத்தில் மிஞ்சியிருக்கும்
முப்பத்தேழு ஆரங்களுக்குள் .


நன்றி :  ' வார்ப்பு  ' இணைய இதழ்