சனி, 25 ஆகஸ்ட், 2012


சாகித்திய அகாதெமி விருது - கொ. மா. கோதண்டம்

குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா. கோதண்டம்

 குறிஞ்சி செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான (2012 ) 'சாகித்ய அகடமியின்' பாலசாகித்ய புரஷ்கார் விருது கிடைத்துள்ளது. இன்று இந்த அறிவிப்பை கிடைக்கப்பெற்றோம்.
எனது தந்தையார் எழுதிய ' காட்டுக்குள்ளே இசைவிழா' எனும் சிறுவர் படைப்புக்கான விருதாகும்.
அறிந்தவர்கள் தொடர்புகொள்ள கொ.மா.கோ அவர்களின் அலைபேசி : 9944415322




நிவேதிதா புத்தகப்பூங்கா வெளியிட்ட ’காட்டுக்குள்ளே இசைவிழா’ சிறுவர் நூலுக்கு இந்த வருட சாகித்திய அகாதெமி விருதை குறிஞ்சிச் செல்வர் கொ. மா. கோதண்டம் பெறுகிறார்.
நன்றி சாகித்திய அகாதெமி.
குறிஞ்சிச் செல்வர் கொ. மா. கோதண்டம் அவர்கள், 15. 9. 1938 இல் கொட்டுமுக்கல மாடசாமி ராஜாவுக்கும், சீதாலட்சுமி அம்மாளுக்கும் பிறந்தார். மனைவி ராஜேஸ்வரிகோதண்டம் எம்.ஏ. ஹிந்தி படித்தவர். 15 நூல்கள் எழுதியவர். இரு மகன்கள், குறளமுதன், இளங்கோ .

நாவல், சிறுகதை, நாடகம், உரை, ஆய்வு, தொகுப்பு முதலிய துறைகளில் 100 நூல்களுக்கு மேல் வெளிவந்துள்ளன. பதிப்பகங்களில் 15 நூல்கள் வெளி வர உள்ளன.

முதல்நூல் 'ஆரண்ய காண்டம்' குடியரசு தலைவர் விருது பெற்றது. பல பரிசுகள் விருதுகள் பெற்றுள்ளார்.

2007 ல் மலேசிய சர்வதேச தொலைநிலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்துள்ளது.

சிவசைலம் முதல் ஏற்காடு கொடைக்கானல் மலைகளில், அடர்வனங்களில், மலைமக்கள் குடிசைகளில், அவர்களுடன் குகைகளில், ஆற்றங்கரைகளில் தங்கி பல தடவைகள் பல நாட்கள் வனங்களில் சுற்றி தாவரங்கள். அரிய மூலிகைகள், விலங்கு, பறவைகள், பற்றி ஆய்வு செய்து, அறிவியல் பூர்வமாக நூல்கள் எழுதியவர்.

செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரில் நாட்டுப்புற இலக்கிய ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார்.

திருக்குறள் உரை, திருவள்ளுவர் இன்ப நாடகம் எழுதியவர். புதுக்கவிதையில் முத்தொள்ளாயிரம் எழுதியுள்ளார். மணிமேகலை இலக்கியத்தை நாடகமாக எழுதியவர். மணிமேகலைக்கு உரை எழுதியவர். புதுக்கவிதையில் மணிமேகலை எழுதியவர்.

இராஜபாளையம் மணிமேகலை மன்றத் தலைவர்.
விலாசம்:
குறிஞ்சிச்செல்வர். கொ.மா. கோதண்டம்
குறிஞ்சித்தெரு, முத்து நகர்
பி.எஸ்.கே. அஞ்சல்
இராஜபாளையம் - 626 108
*